தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு அதிகரிப்பு..!

Breaking News

header ads

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு அதிகரிப்பு..!

தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஆணையிட்டுள்ளார்.

தமிழக அரசுப் பணியாளர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் ஓய்வுபெறும் வயது 58 ஆக உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பிறப்பித்துள்ள ஆணையில், ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments