டிக்டாக் மூலம் நிதி திரட்டி உதவி செய்யும் மதுரை இளைஞர்..!

Breaking News

header ads

டிக்டாக் மூலம் நிதி திரட்டி உதவி செய்யும் மதுரை இளைஞர்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸைன் தாக்கம் தற்போது உச்சநிலையில் உள்ளது.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பலரும் டிக்.டாக் செயலியில் தங்கள்து அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர்.

மதுரை அலாங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டிக்டாக் செயலி மூலம் நண்பர்களை இணைத்து, நிதி பெற்று அப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்திருக்கிறார்.

மனோஜ்குமார் என்ற அந்த இளைஞருக்கு டிக்டாக் மூலம் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்கள் கிடைத்துள்ளனர்.

அந்த நட்பு வட்டத்தைக் கொண்டு நல்லது செய்ய எண்ணியவர், ஊரடங்கால் வருவாய் இன்றி தவிப்போர் குறித்து வீடியோக்களை வெளியிட்டார்.

இந்த வீடியோ வெளியானதில் இருந்து ஏராளமான நிதி குவிய, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமாகவும், அத்தியாவசிய பொருட்களாகவும் வாங்கிக் கொடுத்து, அதனையும் டிக்டாக்கில் பதிவேற்றி பலரது பாராட்டையும் பெற்றுள்ளார் மனோஜ்குமார்.

Post a Comment

0 Comments