விழுப்புரம் மாணவி உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது..!

Breaking News

header ads

விழுப்புரம் மாணவி உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நேரில் சென்று ஆறுதல் ரூபாய் 50,000 உதவித்தொகை வழங்கினார்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்கிற பத்தாம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். முன்னதாக சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் உயிரிழந்த ஜெயஸ்ரீயின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான பொன்முடி ஜெயஸ்ரீயின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கினார்.
அதன்பின்னர் ஜெயஸ்ரீயின் உடல் அதே கிராமத்தில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments