80 மாவட்டங்களில் 7 நாட்களில் தொற்று ஏதும் இல்லை- ஹர்ஷ வர்தன்

Breaking News

header ads

80 மாவட்டங்களில் 7 நாட்களில் தொற்று ஏதும் இல்லை- ஹர்ஷ வர்தன்

80 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்திருக்கிறார்.

பயோடெக்னாலஜி துறை அதிகாரிகளுடன் நடத்திய காணொலி காட்சியில் இதைத் தெரிவித்த அவர், தொற்று இரட்டிப்பு விகிதமும்  கடந்த 3 தினங்களாக 10.9 நாட்கள் என்ற குறைவான எண்ணிக்கையில் இருக்கிறது என்றார்.

47 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பதுடன், 39 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய தொற்று எதுவும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். 17 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் எந்த தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments