ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2840 பேர் கைது : 1355 வாகனங்கள் பறிமுதல்..!

Breaking News

header ads

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2840 பேர் கைது : 1355 வாகனங்கள் பறிமுதல்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2840 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1355 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறியதாக 108பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 கார்கள்  உட்பட 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இதுவரை 2840 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1355 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments