தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி !

Breaking News

header ads

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி !

சேலம் வந்த 5 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்துத் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் 11 பேர், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதில் இந்தோனேசியர்கள் 4 பேர், சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் என 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்துத் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 லட்சத்து ஒன்பதாயிரத்து 276 பேருக்குக் காய்ச்சல் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும், 15ஆயிரத்து 492 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

890 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டதில் 23 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதும், 757 பேருக்குக் கொரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments