தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை (பிப்.26ம் தேதி ) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின் வாரிய செயற்பொறியாளர் சி. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் வருகிற 26ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
சிப்காட் வளாகம், ராஜீவ்நகர், மில்லர்புரம் பகுதி, மடத்தூர், தபால் தந்தி ஊழியர் குடியிருப்புகள், ராஜகோபால்நகர், 3ஆவது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, எப்சிஐ குடோன் பகுதி, நிகிலேசன் நகர், இ.பி. காலனி, டைமன்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், ஆசிரியர் காலனி, சில்வர்புரம், பசும்பொன் நகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், கிருபை நகர், பால்பாண்டிநகர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments