தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் சுகோய் 30 எம்.கே.ஐ. ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இன்று இணைக்கப்பட்டன.
இந்திய பெருங்கடலில் சீன போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன. அந்தமான் கடல்பகுதியில் அண்மையில் ஊடுருவிய சீன கப்பலை இந்திய கடற்படை கண்டுபிடித்து விரட்டியடித்தது. இதுபோல நடைபெறும் எதிரி நாடுகளின் அத்துமீறல்களுக்கு பதிலடி தரவும், இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் வலிமையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில் 1940ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டு, பிறகு பயன்படுத்தப்படாமல் இருந்த விமானப்படை தளத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தி சீரமைத்தது. அந்த தளத்தில் 4ம் தலைமுறை போர் விமானமான சுகோய் 30 ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. இதையொட்டி இருமருங்கிலும் நீர் பீய்ச்சி அடிக்கப்பட அதனுள் சுகோய் விமானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.



0 Comments