தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினையொ்ட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ள பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூபாய் 1000 வழங்கபட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் வழங்கப்படும் நிலையில் .
தூத்துக்குடி உள்ள கீழ அரசடி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் A.T.இராயப்பன் அவர்கள் பொங்கல் பரிசுகளை வழங்கி துவக்கி வைத்தார்.
அரிசி குடும்ப அட்டை வைத்திருந்த பயனாளிகளுக்கு பொங்கல் இடு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், இரண்டடி கரும்பு ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1000 மற்றும் வேஷ்டி சேலை வழங்கினார்.



0 Comments