தூத்துக்குடியில் திருமணமான 6 மாதங்களே ஆன காதல் மனைவி கண் முன்னே விபத்தில் சிக்கிய கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி கணேஷ்நகரை சேர்ந்தவர் முனியசாமி என்பவரது மகன் மோகன் (வயது 24). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன் ஸ்ருதி (வயது 23) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.கணவன், மனைவி இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். திருமணம் முடிந்த நிலையில் கோவில்பிள்ளை நகரில் தனது மனைவி வீட்டில் மோகன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று இரவு கணவன் மனைவி இருவரும் பீச்சிற்கு சென்றுள்ளனர். தனது மனைவியை பீச் ரோட்டில் பைக்கில் இறக்கி விட்டு விட்டு திரும்பும் போது அவ்வழியே வந்த அரசுப்பேருந்து மோதியதில் மோகன் படுகாயம் அடைந்தார்.



0 Comments