முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்..!

Breaking News

header ads

முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்..!



தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார், சி. விஜயபாஸ்கர், துரைகண்ணு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் அதிக மழைபொழிவிற்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்துதல், அணைகளுக்கு வரும் நீர்வரத்தினை கண்காணித்தல், கரையோர மக்களுக்கான முன்னெச்சரிக்கை, நோய் தொற்று ஏற்படாமல் தடுத்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விவசாய நில பாதிப்புகளை கண்காணிப்பது, மின்சார இணைப்புகள் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments