இந்தியாவில் தயாராகும் ஐபோன் XR மற்றும் XS மாடல்கள் அடுத்த மாதம் முதல் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம்,தற்போது பெங்களுரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் மூலம் இந்தியாவிலேயே ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது- முதற்கட்டமாக பழைய மாடல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் ஐபோன் XR மற்றும் XS செல்போன்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த போன்கள் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் உள்ள கடைகளில் விற்பனையாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஐபோன்கள் விலை இந்தியாவில் குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.



0 Comments