சிட்னியை சூழ்ந்தது பனி அச்சத்தில் மக்கள் ..!

Breaking News

header ads

சிட்னியை சூழ்ந்தது பனி அச்சத்தில் மக்கள் ..!

Image result for snow aroundஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சூழ்ந்த கடுமையான பனியால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிப்பொழிவு நிலவியது.
இதனையடுத்து பனியால் சூழ்ந்த பல கட்டிடங்கள், வெண்ணிற போர்வை கொண்டு மூடப்பட்டதைப் போலக் காட்சியளித்தன. அப்பகுதியில் உயரமாக அமைந்துள்ள பிரபல துறைமுக பாலத்தையும் பனிமூட்டம் மூடியது.
உறைபனிக்குள் புகுந்து பயணிக்க விமானங்கள் சிரமப்பட்டதையடுத்து, சில விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். பின்னர் நேரம் செல்லச் செல்ல பனி மூட்டமானது விலகி இயல்பு நிலை திரும்பியது.

Post a Comment

0 Comments