ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா, அந்நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா, சீனா, தைவான், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்திருந்தது. இந்த விலக்கு மே ஒன்றாம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
அதேசமயம், அமெரிக்காவின் பொருளாதார தடைகளால், ஈரானின் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கி, பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி ((Hasan Rouhani)) கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தத்தால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியாவும் நிறுத்திவிட்டால் அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஷரீஃப் ((Javed Zarif)) இந்தியா வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் பேச்சு நடத்த உள்ளார்.


0 Comments